ௐ அருள்மிகு ஶ்ரீ சங்கரநாராயணர் ஆலயம்
12 வது சிவாலயம் திருநட்டாலம் :
திருப்பன்றிக்கோட்டிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது திருநட்டாலம். இது தான் 12 வது திருத்தலம். இத்துடன் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள் பக்தர்கள்!
இந்தக் கோயிலில், ஸ்ரீசங்கரநாராயணர் எனத் திருநாமம் விஷ்ணுவுக்கு! 12-வது ருத்திராட்சம் விழுந்ததாகவும் வியாக்ரபாதர் இந்த ஆலயத்தை அமைத்தார் என்றும் சொல்கிறது ஸ்தல புராணம்.
இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, சிவபெருமானையும் பின்னர் சங்கரநாராயணரையும் தரிசித்து, ஹரியும் சிவனும் ஒன்றே என உணர்ந்து, பூரித்து, நிம்மதியும் நிறைவுமாகச் செல்வார்கள் பக்தர்கள்.
ஹரியும் சிவனும் ஒன்றென உணர்வோம். சைவ வைணவ பேதமின்றி வணங்கித் தொழுவோம்!
கோவிந்தா... கோபாலா...
தென்னாடுடைய சிவனே போற்றி!
Arulmigu Shree Sankaranarayana Temple
The 12th Shivalayam Nattalam
It is about 4 km from Thirupannicode Is in the distance.This is the 12th Shivalayam. Devotees complete the Shivalaya flow with this!
Post a Comment